World News
ஏமனின் சிறைச்சாலையில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை ஐ.நா. கண்டித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஏமன் செய்தித் தொடர்பாளர் பஷிர் உமர் கூறும்போது, “ஏமனின் சாடா நகரில் உள்ள சிறைச்சாலையை குறிவைத்து சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் இதுவரை 100 பேர் வரை பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். சிறைச் சாலைகளில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் காட்சிகளை காண முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment