World News

ராணி விக்டோரியா பதின்பருவத்தில் வலம் வந்துகொண்டிருந்த காலத்தில் ஜொனாதன் பிறந்தது. 120 வருடங்களுக்கு முன்னர், தனது 81 வயதில் ராணி விக்டோரியா மரணித்துவிட்டார். ஆனால், இன்றும் ஜொனாதன் இன்னமும் செயின்ட் ஹெலினா தீவில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் 190-வது பிறந்தநாளை கொண்டாடுவதன் மூலம், இதுவரை வாழ்ந்த ஆமைகளில் மிகவும் வயதான ஆமை என்ற பெருமை, ஜொனாதனுக்கு கிடைக்கவுள்ளது.

1832-ஆம் ஆண்டு பிறந்ததாகக் கருதப்படும் ஜொனாதன், சர் வில்லியம் கிரே-வில்சன் என்பவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இவர் 1882 ஆண்டு பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் ஹெலினாவுக்கு கவர்னராக வருகை புரிகிறார். இவருடன்தான் ஜொனாதனும் செயின்ட் ஹெல்னாவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை செயின்ட் ஹெலினாவில், சுமார் 31 கவர்னர்களை ஜொனாதன் சந்திருக்கிறது. செயின்ட் ஹெலினாவின் கவர்னர் இல்லத்தில்தான் ஜொனாதன் தனது வாழ்நாள் முழுவதையும் செலவழித்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News