Sports in Tamil

41 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக தங்களது சொந்த நாட்டில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் ஆஸ்திரேலிய வீராங்கனை அஷ்லிக் பார்ட்டி. இந்த வெற்றி பலரின் பாராட்டுகளை பெற்றுள்ள நிலையில் இறுதிப் போட்டியில் வென்று அவர் கோப்பையை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உலகளவில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் இடத்திலுள்ள ஆஸ்திரேலிய வீராங்கனை அஷ்லிக் பார்ட்டி இன்று நடந்த பெண்கள் அரையிறுதி ஆட்டத்தில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியாவின் 41 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அஷ்லிக் பார்ட்டி. கடந்த 41 வருடங்களாக தங்களது சொந்த நாட்டில் நடக்கும் டென்னிஸ் தொடரில் ஒரு ஆஸ்திரேலியர் கூட இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியவில்லை. 1980ல் வெண்டி டர்ன்புல் என்பவர் கடைசியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தார். அதன்பிறகு, இந்த நீண்டகால ஏக்கத்தை தீர்த்துள்ளார் பார்ட்டி.

Comments

Popular posts from this blog

World News

World News

World News