Sports in Tamil

ஜம்மு: குளிர்கால ஒலிம்பிக்கில் இரண்டு விதமான போட்டிகளில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற தனிச் சிறப்பைப் பெற்ற பனிச்சறுக்கு விளையாட்டு வீரரான தனது மகன் ஆரிப் முகம்மது கான் இதுவரை பெற்ற பதக்கங்களை பெருமிதத்துடன் காட்டினார் காஷ்மீரைச் சேர்ந்த தாய்.

நவீனகால ஒலிம்பிக்குகள் தொடங்கி நூற்றாண்டை கடந்த நிலையில், எண்பதுகளில் தொடங்கப்பட்ட குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. தொடக்கத்தில் வழக்கமான (அதாவது கோடைக்கால) ஒலிம்பிக்ஸ் நடத்தப்படும் நாட்டிலேயே குளிர்கால ஒலிம்பிக்ஸும் நடத்தப்பட வேண்டும் என்றும், இவை ஒரே ஆண்டில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், குளிர்காலத்தில் வழக்கமான ஒலிம்பிக்ஸை நடத்த முடியுமா? இரண்டு ஒலிம்பிக்ஸையும் ஒரே நேரத்தில் நடத்தினால் போட்டி முடிவுகளை தனித்தனியாக அறிவிப்பதா? இணைத்து பதக்கங்களைக் கணக்கிட்டு வெற்றியாளரைத் தீர்மானிப்பதா? அப்படிச் செய்தால் குளிர்கால விளையாட்டுக்கள் ஆடும் சூழலே இல்லாத நாடுகளுக்கு அது அநீதி செய்வதாக ஆகாதா? இந்தக் கேள்விகள் எழ, குளிர்கால ஒலிம்பிக்ஸுக்கான விதிகள் மாற்றி அமைக்கப்பட்டன.

Comments

Popular posts from this blog

World News

World News

World News