Sports in Tamil

துபாய்: ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்த ஏற்ற ஒரு வீரர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் தெரிவித்துள்ளார். ரோஹித்தின் சாதனைகளைப் பட்டியலிட்டுள்ள அவர், விராட் கோலியின் ஓய்வு தனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது என்றும் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் புகழ்பெற்ற கேப்டன் ரிக்கி பான்டிங். சமீபத்தில் இவர் ஐசிசிக்கு அளித்த பேட்டியில் இந்திய அணியின் முன்னாள், இந்நாள் கேப்டன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து பேசியுள்ளார். ரோஹித் சர்மா தொடர்பாக பேசிய பான்டிங், "மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் கேப்டனாக நுழைந்தேன். துரதிர்ஷ்டவசமாக, முதல் சில ஆட்டங்களுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து விளையாட முடியாத நிலை. என் இடத்தை மற்றொரு இளம்வீரருக்கு கொடுக்க முடிவெடுத்து அந்த அணியில் இருந்து விலகினேன். எனக்குப் பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்பதற்கு பொருத்தமான நபர் யார் எனக் கேள்வி எழுந்தபோது ஒரே ஒரு இளம் வீரர் மட்டுமே அணியை வழிநடத்த முடியும் என்பது எனக்கு தெளிவாகத் தெரிந்தது. அதுதான் ரோஹித் சர்மா.

Comments

Popular posts from this blog

World News

World News

World News