World News
வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் 1919-ல் பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் இங்கிலாந்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீதுதுப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் இங்கிலாந்து ராணி 2-ம்எலிசபெத்தைக் கொல்லப்போவதாக மர்ம நபர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவில் முகமூடி அணிந்த அந்த நபர் தன் பெயர் ஜஸ்வந்த் சிங் சைல் என்றும் தான் ஒரு இந்திய சீக்கியர் என்றும் கூறி ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்காக ராணி எலிசபெத்தைக் கொலை செய்யப்போவதாகக் கூறுகிறார். அந்த மனிதர் கையில் வில்லுடன் உள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Comments
Post a Comment