World News
மியான்மரின் கயா நகரில் ராணுவத்தால் கொல்லப்பட்ட 30-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலை மனித உரிமை அமைப்பான 'காரென்னி' உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காரென்னி அமைப்பு வெளியிட்ட தகவலில், “மியான்மரின் கயா நகரில் அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டு எரியூட்டப்பட்ட 30-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களில் குழந்தைகள், வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோரும் அடங்குவர். மியான்மர் ராணுவத்தின் இந்த மனிதத் தன்மையற்ற செயலை நாங்கள் வன்மையாக கண்டிகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு மியான்மர் அரசு தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை
Comments
Post a Comment