World News
பாக்ஸ்லோவிட் மாத்திரைகளை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து துறை நிர்வாகம் அங்கீகரித்துள்ளதாக பைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பைஸர் நிறுவனம் தரப்பில், “கரோனாவுக்கு எதிரான முதல் மாத்திரையை எங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கரோனாவுக்கு எதிரான மாத்திரைகளை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து துறை நிர்வாகம் அங்கீகரித்துள்ளது. இந்த மாத்திரைகளை வீட்டில் சிகிச்சை பெறுபவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். கரோனா அறிகுறி தென்பட்டவர்களுக்கு இந்த மாத்திரைகள் 90% பயனளிக்கக் கூடியவை. இது வேகமாக பரவி வரும் ஓமைக்ரானுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கியமான கருவியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment