World News
ஜெனீவா: பூஸ்டர் டோஸ்களால் மட்டுமே கரோனா பெருந்தொற்றை உலக நாடுகள் ஒழித்துவிட முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி விநியோகத்தில் சமநிலையை உறுதிப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உலகின் ஒருசில பகுதிகளில் மட்டும் தடுப்பூசி திட்டம் சரிவர செயல்படுத்தப்படாமல் அங்கு கரோனா பரவல் தொடர்ந்தால் அது புதுப்புது உருமாற்றங்களுக்கே வழிவகுக்கும் என ஹூ நீண்ட நாளாக எச்சரித்து வருகிறது.
Comments
Post a Comment