Sports in Tamil
செஞ்சூரியன்: "கிரிக்கெட்டில் என்னுடைய வெற்றிக்கு முழுக் காரணம் என் தந்தைதான். அவர் இல்லாவிட்டால் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது" என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்தார்.
செஞ்சூரியனில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்திய அணி 327 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது, தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களில் சுருண்டது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 5-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி தனது 200-வது விக்கெட்டுகளையும் சாய்த்தார்.
Comments
Post a Comment