World News
தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை கரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ்வேகமாக பரவும் தன்மை கொண்டது. எனவே, இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளை தீவிரமாகபரிசோதிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹானில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ்பரவியது. 2 அலை கரோனா வைரஸ்பரவலால் உலகமே கடுமையான பாதிப்பை சந்தித்தது. மேலும், கரோனாவின் மரபணு தொடர்ந்து உருமாறி புதிய வகை வைரஸ்கள் உருவாகி வருகின்றன. இதில் ஒன்றான கரோனாவின் டெல்டா வைரஸ், 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
Comments
Post a Comment