World News
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, தென் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள 6 நாடுகளுக்குத் தடை விதித்து பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது.
பிரிட்டனில் கரோனா தொற்றின் 2 அலைகள் வந்து ஓய்ந்துவிட்ட நிலையில் 3-வது அலை தொடங்கியுள்ளது. பிரிட்டனில் உள்ள பெரும்பாலான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தியும்கூட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் மக்கள் புதிதாக கரோனாவில் பாதிக்கப்படுகிறார்கள்.
Comments
Post a Comment