Sports in Tamil
அறிமுகப் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யரின் அரைசதம், ஜடேஜாவின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் கான்பூரில் இன்று தொடங்கியநியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது.
அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 75 ரன்களிலும், ரவிந்திர ஜடேஜா 50 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிந்திர ஜடேஜா தனது 17-வது அரைசதத்தை நிறைவு செய்தார்.
Comments
Post a Comment