World News

அமெரிக்காவில் கரோனா காலத்தில் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய விமான நிறுவனங்கள், தற்போது கூடுதல் விமானங்கள் இயக்க தேவை உள்ள சூழலில் விமானங்களை இயக்க ஆளில்லாமல் தவிக்கின்றன. நூற்றுக்கணக்கான விமானங்கள் கடந்த சில தினங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கரோனா தொற்றில் இருந்து உலகம் வேகமாக மீண்டெழுந்து வருகிறது. தடுப்பூசிகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கியதன் மூலம் பயணத் தேவை அதிகரித்து வருவதால் அதிகமான விமானங்களை இயக்கும் சூழல் உள்ளது. ஆனால் கரோனா காலத்தில் பல விமான நிறுவனங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. சில நிறுவனங்கள் ஊழியர்களை காத்திருப்பில் வைத்தது. இதனால் அவர்கள் வேறு பணிகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில் தற்போது விமான சேவை அதிகரித்து இருக்கும் நிலையில் விமானங்களை இயக்க பணியாளர் பற்றாக்குறையை விமான நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.

Comments

Popular posts from this blog

World News

World News

World News