World News
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு முந்தைய ஆட்சியின்போது, கொலைக் குற்றவாளிகள் என்று அறிவித்த பெண் நீதிபதிகளைத் தேடிச் சென்று கொலையாளிகள் வேட்டையாடி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் நீதிக்கும், நீதிபதிக்குமே பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது.
ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறியபின் தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிவிட்டனர். கடந்த முறை போன்று கொடுமையான ஆட்சி இருக்காது, பெண்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படும், சுதந்திரம் வழங்கப்படும் எனத் தலிபான்கள் தரப்பில் அறிவித்தாலும் பெண்களைத் தொடர்ந்து அடிமை போன்றே நடத்துகிறார்கள்.
Comments
Post a Comment