World News
ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை இயக்குங்கள் என இந்திய அரசுக்கு தலிபான்கள் கடிதம் எழுதியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சி நடைபெறுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் காபூலைக் கைப்பறியதுமே பல்வேறு நாடுகளும் அவசர கதியில் தத்தம் மக்களை இயன்றவரை ஆப்கனில் இருந்து மீட்டன. அந்த வகையில் இந்திய விமானப்படையின் விமானம் கடைசியாக ஆகஸ்ட் 15ல் ஆப்கன் சென்று இந்தியர்களை மீட்டு வந்தது.
அதன்பின்னர் அங்கிருந்து ஆகஸ்ட் 30ஆம் தேதி அமெரிக்கப் படைகளும் முழுமையாக வெளியேறின. கடைசி நாட்களில் மக்கள் விமான நிலையத்தில் திரண்டதாலும், ஐஎஸ் தீவிரவாதிகள் விமான நிலையத்தைக் குறிவைத்து நடத்திய தாக்குதலாலும் விமான நிலையம் சேதமடைந்தது. தலிபான்கள் முறைப்படி ஆட்சியமைக்கவும் கால தாமதமானது. இதற்கிடையில் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான விமானப் போக்குவரத்தை பாதுகாப்புக் காரணங்களுக்காக துண்டித்தன.
Comments
Post a Comment