World News
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், காரைக்கால் மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் எவ்விதப் பாகுபாடுமின்றி வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மாவட்ட எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள 9 சோதனைச் சாவடிகளிலும் வருவாய்த்துறை ஊழியர்கள், ஆசிரியர்களைக் கொண்ட ஏழு பறக்கும் படையினர் வாகனங்களைச் சோதனையிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையினருடன் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment