World News
அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காபூலில் உயிரிழப்பு ஏற்படுவதற்குக் காரணம் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீனத் தொலைக்காட்சிக்கு சபிஹுல்லா அளித்த பேட்டியில், “நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காபூலில் தற்கொலைப்படை தீவிரவாதியைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானம் (ட்ரோன்) தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் பலியானார்கள். உயிரிழப்பு ஏற்படுவதற்கு அமெரிக்காவின் தாக்குதலே காரணம். இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் எந்த முன் அறிவிப்பையும் அமெரிக்கா எங்களிடம் முன்பே தெரிவிக்கவில்லை. அமெரிக்கா தெரிவித்திருக்க வேண்டும்.
Comments
Post a Comment