World News
காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்திருந்த சில மணி நேரத்துக்குள்ளாக, அந்த விமான நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில் ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்கப் படைகளின் வெளியேற்ற அறிவிப்பை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கடந்த 15-ம் தேதி கைப்பற்றினர். அங்கிருந்து அமெரிக்கர்களையும், அமெரிக்க படைகளுக்கு உதவிய ஆப்கன் மக்களையும் மீட்பதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.
Comments
Post a Comment