World News
ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுத்தி படைகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 30 பேர் பலியாகினர். 60க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஏமனின் தென் பகுதியில் ஈரான் ஆதரவு ஹவுத்தி படைகள் தாக்குதல் நடத்தின. இரு அடுத்தடுத்த ஏவுகணைத் தாக்குதலைக் கிளர்ச்சியாளர்கள் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் காரணமாக ஏமனின் தென் பகுதிகளில் கடுமையான பதற்றம் நிலவுகிறது” என்று செய்தி வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment