Sports in Tamil

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் தொடரின் 4-வது நாளான நேற்று மகளிருக்கான டேபிள் டென்னிஸ் கிளாஸ் 4 பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பவினாபென் படேல், பிரேசிலின் ஜாய்ஸ் டி ஆலிவியராவை எதிர்த்து விளையாடினார். இதில் பவினாபென் படேல் 12-10, 13-11, 11-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மாலையில் நடைபெற்ற கால் இறுதி சுற்றில் பவினாபென் படேல், நடப்பு சாம்பியனான செர்பியாவின் போரிஸ்லாவா பெரிக் ராங்கோவிச்சை எதிர் கொண்டு 11-5, 11-6, 11-7 என்ற நேர் செட்டில் வென்று அரை இறுதி சுற்றி கால்பதித்தார்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News