World News
கரோனா வைரஸ் வேற்றுருவாக்கம் காரணமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டால் மூன்று ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்படும் என்று சவுதி அரேபியா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ கரோனா பரவல் அதிகமுள்ள நாடுகளை, தனது நாட்டுக் குடிமக்கள் பயணிக்கக் கூடாத வகையில் சிவப்புப் பட்டியலில் சவுதி அரேபியா வைத்துள்ளது. அந்த வகையில் அப்பட்டியலில் உள்ள நாடுகளுக்கு தடையை மீறி பயணம் மேற்கொண்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்படும் என்று சவுதி வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது.
Comments
Post a Comment