Sports in Tamil
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாள் ஜூன் 25, 1983. இந்த நாளில்தான் இந்திய அணி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.
1983-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல்தான் இந்திய அணி சென்றது. இத்தொடரின் முதல் லீக் போட்டியிலேயே முன்னாள் சாம்பியனான மேற்கிந்திய தீவுகளை 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்த, உலகமே அதைப்பற்றி பரபரப்பாக பேசியது. இந்த வெற்றியால் உற்சாகமடைந்த இந்திய அணி தடதடவென முன்னேறி இறுதி ஆட்டம் வரை வந்தது.
Comments
Post a Comment