World News
கரோனா நெருக்கடி காலத்தில் இந்தியாவின் உதவியை ஒருபோதும் மறக்க மாட்டோம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளி ன்கன் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சர்எஸ்.ஜெய்சங்கர் 5 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, அமெரிக்கா சென்றுள்ள முதல் இந்திய கேபினட் அமைச்சர் ஜெய்சங்கர் ஆவார். இந்நிலையில் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கனை சந்தித்துப் பேசினார். அப்போது பிளின்கன் கூறும்போது, "கடந்த ஆண்டு கரோனா நெருக்கடி காலத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா உதவியது. இதை அமெரிக்கா ஒருபோதும் மறக்காது. இப்போது நாங்கள் இந்தியாவுக்கு உதவியாக இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்” என்றார்.
Comments
Post a Comment