World News
தென் ஆப்பிரிக்கா விரைவில் கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள இருப்பதால், கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு அரசு தயாராகி வருகிறது.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கூறும்போது, “தென் ஆப்பிரிக்கா, கரோனா மூன்றாவது அலையில் நுழைய இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. கரோனா மூன்றாவது அலை உச்சத்தை அடைவதற்குள் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment