World News
பஞ்சாப் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன்பெற்று மோசடி செய்து தப்பிச் சென்ற தொழிலதிபர் மெகுல் சோக்ஸி, கரிபியன் தீவான ஆன்டிகுவா பர்படாஸிலிரு்து தப்பிச் சென்று டோமினிக்கா நாட்டில் பிடிபட்ட நிலையில், மெகுல் சோக்ஸியை ஏற்க மாட்டோம் எங்கள் நாட்டுக்கு அனுப்பாதீர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்துங்கள் என்று ஆன்டிகுவா பர்படாஸ் பிரதமர் கேஸ்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்டிகுவா மற்றும் பர்படாஸில் முதலீட்டுத் திட்டம் மூலம் குடியுரிமையை மெகுல் சோக்ஸி பெற்றார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்து 2018ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கரிபியன் தீவுக்கு மெகுல் சோக்ஸி குடும்பத்துடன் தப்பி அங்கு வாழ்ந்து வருகிறார் .
Comments
Post a Comment