World News
புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊருக்குப் பயணிக்க விடமால் விதிக்கப்படும் தடைகளால் கரோனா தொற்றின் எண்ணிக்கை இந்திய அளவில் அதிகரிக்கவே செய்யும் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவைக் கட்டுப்படுத்த பெரும்பாலான அரசுகள் பயணத் தடைகளை விதிக்கின்றன. ஊரடங்கு மற்றும் மக்களின் பயணங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கரோனா பரவலைச் சிறிதளவு மட்டுமே தடுக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்களும் வலியுறுத்துகின்றனர். இதன் காரணமாக இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ள இந்தியாவிலும் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பயணத் தடைகள் கரோனா தொற்றுகளை அதிகரிக்க மட்டுமே செய்யும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.
Comments
Post a Comment