World News
இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தங்கள் நாட்டுக் குடிமக்கள் வெளியேற வேண்டுமென்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமாக இருப்பதால், அங்கு பணிபுரியும் அமெரிக்க அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களை நாடு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறோம். அமெரிக்க குடிமக்கள் நாடு திரும்புவதற்கான பயணங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment