Sports in Tamil
ஐபிஎல் டி 20 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தங்களது பந்து வீச்சாளர்களிடமிருந்து மிகவும் ஈர்க்கக்கூடிய செயல்திறன் வெளிப்பட்டதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயன் மோர்கன் தெரிவித்தார்.
ஐபிஎல் டி 20 தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தங்களது கட்டுக்கோப்பான பந்து வீச்சால் 123 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. தொடர்ந்து எளிதான இலக்கை விரட்டிய கொல்கத்தா அணியானது கேப்டன் இயன் மோர்கன் (47), ராகுல் திரிபாதி (41) ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் 20 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது. இந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு இது 2வது வெற்றியாக அமைந்தது.
Comments
Post a Comment